2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சகோதரியுடன் வசித்து வந்தவர் சடலமாக மீட்பு

Janu   / 2025 ஜூலை 29 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் தனது சகோதரியுடன் வசித்து வந்த ஒருவர்  படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் , மணியம் தோட்டம் , 1ஆம் குறுக்குத் தெருவைச், சேர்ந்த வைரமுத்து சாந்தலிங்கம்  (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த நபரும் , அவரது 56 வயதுடைய சகோதரியும் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை (29) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X