Janu / 2025 மே 25 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் பகுதியில் நீர் வடிகால் வாய்க்காலில், மோட்டார் சைக்கிளுடன் விழுந்து, குடும்பஸ்தர் ஒருவர் சனிக்கிழமை (24) இரவு உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட பரந்தன் விவசாய திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிய, கிளிநொச்சி 190 இலக்கத்தில் வசிக்கும், மூன்று பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய சோமு கஜேந்திர மூர்த்தி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் மரண விசாரணைக்காக மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
எம்.தமிழ்ச்செல்வன்

1 hours ago
5 hours ago
8 hours ago
11 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
8 hours ago
11 Mar 2026