Freelancer / 2021 டிசெம்பர் 07 , பி.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டிகை காலம் நெருங்கி வருவதால், சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிராந்திய பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
சுகாதார நெறிமுறைகளை மீறி பொருட்களை விற்கும் விற்பனையாளர்கள் மற்றும் அதிக எண்ணிக்கையில் கூடும் நுகர்வோர் மீது அவர்கள் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
விற்பனையாளர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை மட்டுமல்ல, கொரோனா நெறிமுறைகளை மீறி வணிகங்களில் ஈடுபடும் வணிக விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
ஒமிக்ரோன் மாறுபாடு உலகுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தாலும், இலங்கையில் உள்ள மக்கள் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கிட்டத்தட்ட மறந்துவிட்டார்கள், இது தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, ஒமிக்ரோனால் முன்வைக்கப்படும் அச்சுறுத்தலுடன் நாட்டின் எதிர்கால தலைவிதியை தீர்மானிப்பதில் எதிர்வரும் பண்டிகை காலம் முக்கியமானதாக இருக்கும் என்பதால், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு உபுல் ரோஹன வலியுறுத்தினார்.
19 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago