Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஏப்ரல் 01 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்வேறு நாடுகளில் வசிக்கும் மக்களின் கணக்குகளில் இருந்து மில்லியன் கணக்கான பணத்தை இணையத்தளம் மூலம் மோசடி செய்த சீன பிரஜைகள் 39 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்
தூதரகங்கள் ஊடாக பெறப்பட்ட முறைப்பாடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த குழுவினர், சனிக்கிழமை (01) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அளுத்கம களுவாமோதர பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் வாடகை அடிப்படையில் பல மாதங்களாகத் தங்கியிருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு அளுத்கம பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செய்யப்பட்டுள்ளனர்.
கணினிகள், மதிப்பு மிக்க திறன்பேசிகள் மற்றும் பெருந்தொகை பணத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
23 minute ago
33 minute ago
57 minute ago