Freelancer / 2023 மார்ச் 30 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகாவலி கங்கைக்கு நீரைக் கொண்டு செல்லும் ஆறுகளில் ஒன்றான ஹட்டன் ஓயா ஆற்று வனாந்தரத்தில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்ந்த குற்றச்சாட்டின் கீழ் ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன்-ஸ்டெதன் தோட்டத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 25 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட இவர்கள், பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன எனத் தெரிவித்த ஹட்டன் பொலிஸார், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை பொருட்களுடன் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
9 hours ago
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
28 Oct 2025