Shanmugan Murugavel / 2021 ஜூலை 12 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் தலைநகர் இலண்டனில் நடைபெற்று வந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், உலகின் முதல் நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச் சம்பியனாகியுள்ளார்.
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், தற்போதைய உலகின் எட்டாம் நிலை வீரரான இத்தாலியின் மட்டியோ பெரெட்டனியை எதிர்கொண்ட சேர்பியாவின் ஜோக்கோவிச், 6-7 (4-7), 6-4, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று தனது 20ஆவது கிரான்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றியிருந்தார்.
அந்தவகையில், அதிக கிரான்ட் ஸ்லாம் பட்டங்களாக 20 பட்டங்களைக் கைப்பற்றிய உலகின் ஒன்பதாம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், மூன்றாம் நிலை வீரரான ஸ்பெய்னின் ரஃபேல் நடாலின் சாதனையை ஜோக்கோவிச் சமப்படுத்தியிருந்தார்.
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025