Niroshini / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் நாகவில்லு பகுதியில், சனிக்கிழமை (27) இரவு இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பங்கதெனிய பகுதியைச் 36 வயதுடைய ஒருவரே, இவ்விபத்தில் உயிரிழந்தவர் ஆவார்.
புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர் திசையில் பயணித்த லொறி ஒன்றுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் கூறினர்.
இதன்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்றவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில், புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கட்டார்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய லொறி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
8 minute ago
22 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
22 minute ago
26 minute ago