Editorial / 2017 செப்டெம்பர் 01 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.என்.நிபோஜன்
கலைஞரும், கிராம சேவையாளருமான தினேஷின் வரியிலும்,குரலிலும் உருவான தமிழ் சிங்கள இருமொழி பாடல் இறுவட்டு வௌியீடட்டு நிகழ்வு இன்று (01) கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கடந்த எட்டு மாதகாலமாக பல கலைஞர்களின் உழைப்பில் உருவான இருமொழிப் பாடலை பிரதம விருந்தினராக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் ஜெராணி சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி முல்லைத்தீவிர்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஸ் வெளிகன்ன ஆகியோர் வெளியிட்டு வைத்தனர்
இந் நிகழ்வில் படைப்பாளிகள் , கலைஞர்கள் ,நலன்விரும்பிகள் , மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர் .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .