2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இந்திய வியாபாரிக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சுற்றுலா விசாவில் நாட்டுக்குள் வந்து, புடைவை வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய வியாபாரியை எதிர்;வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் திங்கட்கிழமை (21) உத்தரவிட்டார்.

புங்குடுதீவு பகுதியில் சட்டவிரோதமான முறையில் புடைவை வியாபாரத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நபர் ஞாயிற்றுக்கிழமை (20) ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அவரை திங்கட்கிழமை (21) ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .