Editorial / 2019 மார்ச் 24 , மு.ப. 11:08 - 1 - {{hitsCtrl.values.hits}}
மீன்பிடிப் படகொன்றில் போதைப் பொருட்களுடன் பயணித்த 9 ஈரான் நாட்டவர்கள் இன்று காலை இலங்கையின் தென் கடற் பிரதேசத்தில் வைத்து, 100 கிலோ கிராமுக்கு அதிகமானப் போதைப் பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் விசேட படையணியின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர் லத்தீப் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசேடப் படையணினியின் இந்த நடவடிக்கைக்கு, கடற்படையினரிதும் ஒத்துழைப்பு கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த படகு சுற்றிவளைக்கப்பட்ட போது கப்பலிலிருந்து 50 கிலோகிராமுக்கும் அதிகமாக போதைப் பொருள் கடலுக்குள் கொட்டப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளதுடன், இந்தப் போதைப் பொருள் ஆப்கானிஸ்தானிலிருந்தே இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதென்றும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர் லத்தீப் தெரிவித்துள்ளார்.
7 hours ago
9 hours ago
01 Feb 2026
john Wednesday, 03 April 2019 12:25 AM
these people always spoil others life
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
01 Feb 2026