2025 ஜூன் 23, திங்கட்கிழமை

“பப்பா“ கைது

Editorial   / 2019 ஜனவரி 09 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் அண்மைக்காலமாக இடம்பெற்ற பல்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களுடன் தொடர்புடைய, பாதாள குழு உறுப்பினரொருவர் கைக்குண்டுகள் மற்றும் போதைப்பொருளுடன் கொழும்பு குற்றவிசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாளிகாவத்தைப் பகுதியில் வைத்தே “பப்பா” எனப்படும் 28 வயதுடைய சந்தேகநபர் கைதுசெய்யபட்டுள்ளாரென்றும், மாளிகாவத்தைப் பகுதியில் பிரபல பாதாள குழுவொன்றின் உறுப்பினரும் தற்போது டுபாயில் மறைந்து வாழும் “ கஞ்சிபானி இம்ரான்“ எனப்படுபவரின் உதவியாள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் இன்றைய தினம் கைதுசெய்யப்பட்ட ​போது அவரிடமிருந்து 2 கைக்குண்டுகளும் 5 கிராம் 340 மில்லிகிராம் ஹெரோய்னையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .