2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இரட்டைக்கொலை ; ஒருவர் கைது

Editorial   / 2019 ஓகஸ்ட் 27 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வென்னப்புவ, வாய்க்கால் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

8 வயது சிறுவன் மற்றும் 19 வயது யுவதி ஆகிய இருவரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கழிவு நீர் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .