George / 2017 ஜனவரி 01 , மு.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
குளியாப்பிட்டிய – இலுக்ஹேன பிதேசத்தில் இடம்பெற்ற மோதலில் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நபர் அவருடைய வீட்டுக்குள் வைத்து தடியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளானவர் படுகாயமடைந்த நிலையில், குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இலுக்ஹேன - குடாவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய நபரே, உயிரிழந்துள்ளதுடன் குடும்பப் பிரச்சினை காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்றுள்ளதுடன் அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
11 minute ago
19 minute ago
15 Nov 2025
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago
15 Nov 2025
15 Nov 2025