Editorial / 2018 டிசெம்பர் 18 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
நபர்களை கனடாவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து பல மில்லியன் ரூபாய்களை மோசடி செய்த பெண்ணொருவர், நவகமுவ பிரதேசத்தில் வைத்து குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணுக்கு எதிராக 51 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இதற்கமைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் சந்தேகநபரைக் கைதுசெய்யும் போது, அவரிடமிருந்து 350 கிராம் நிறையுடைய தங்க ஆபரணங்கள் 50,000 ரூபாய் பணம், வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் 72, வங்கி புத்தகங்கள் 51 மற்றும் 50 ஏ.டி.எம் அட்டைகள் என்பன மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




9 hours ago
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
01 Feb 2026
01 Feb 2026