ஆர்.மகேஸ்வரி / 2018 ஜனவரி 01 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
டைட்டேரியன் வர்க்கத்திலான வலம்புரி சங்கினை 4 கோடி ரூபாய்க்கு விற்க முயற்சித்த நால்வர் வத்தளை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வத்தளை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மாபோலை பகுதியில் வைத்து நேற்று (31) இரவு 8.40 மணியளவில் குறித்த சந்தேகநபர்களை கைதுசெய்ததாக வத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 31, 34, 36 மற்றும் 37 வயதானவர்கள் எனவும், இவர்கள் மருதானை, வெல்லம்பிட்டி, கிராண்ட்பாஸ் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்றைய தினம் வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
41 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
50 minute ago