2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

ஹெரோய்னுடன் குடும்பஸ்தர் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 12 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று பிரதேசத்தில், ஹெரோயினுடன் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று(11) மாலை, கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சந்தேக நபரை அக்கரைப்பற்று பதுர் நகர்ப் பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

22 வயதுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து, ஒரு தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை  எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .