Princiya Dixci / 2017 ஜனவரி 10 , மு.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
தேர்தல்கள் எல்லை நிர்ணயக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225இலிருந்து 240ஆக அதிகரிக்கவிருப்பதாக அறியமுடிகிறது.
அதனடிப்படையில், எம்.பிக்களின் எண்ணிக்கை 15ஆல் அதிகரிக்கப்படவிருக்கின்றது.
அதற்கு மேலதிகமாக, மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 4,250 இலிருந்து 8,500 வரையிலும் அதிகரிப்பதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவித்தன. தேர்தல்கள் எல்லை மற்றும் தேர்தல்கள் முறைமை தொடர்பில் அறிக்கை தயாரிப்பதற்காக, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் நியமிக்கப்பட்ட அசோக பீரிஸ் தலைமையிலான குழுவின் அறிக்கையிலேயே, மேற்கண்ட விடயங்கள் உள்ளக்கப்பட்டுள்ளன.
4 hours ago
29 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
29 Dec 2025