R.Tharaniya / 2025 ஏப்ரல் 21 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
107வது (Yonex All England Seniors Badminton Championship) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை பேட்மிண்டன் வீராங்கனை சந்திரிகா டி சில்வா, 02 தங்கப் பதக்கங்களை வென்று திங்கட்கிழமை (21) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
1919 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் போட்டி, உலக கூட்டமைப்பின் பேட்மிண்டன் மேற்பார்வையின் கீழ் இங்கிலாந்து பேட்மிண்டன் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இது இங்கிலாந்தின் (Hatfield)யில் 04/11திகதி முதல் 04/13திகதி வரை நடைபெற்றது, இந்தப் போட்டிக்கு 15 நாடுகளைச் சேர்ந்த 500 பேட்மிண்டன் (Badminton) வீரர்கள் பங்கேற்றனர்.
50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவிலும், 45 வயதுக்கு மேற்பட்ட கலப்பு இரட்டையர் பிரிவிலும் சந்திரிகா டி சில்வா தங்கப் பதக்கங்களை வென்றார்.
45 வயதுக்கு மேற்பட்ட கலப்பு இரட்டையர் போட்டியில், டென்மார்க் வீராங்கனை மோர்டன் ராஸ்முசென் சந்திரிகா டி சில்வாவுடன் இணைந்து போட்டியிட்டார்.
இந்த வெற்றியின் மூலம், சந்திரிகா டி சில்வா செப்டம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெறும் உலக சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சந்திரிகா டி சில்வா வரவேற்க இலங்கையின் பேட்மிண்டன் சங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் விமான நிலையத்தில் இருந்தார்
டி.கே.ஜி. கபிலா


8 hours ago
06 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Feb 2026