Editorial / 2026 பெப்ரவரி 06 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைப் போக்குவரத்துச் சபையில் (SLTB) 19 பெண் நடத்துனர்கள் நிரந்தரப் பணியில் நியமிக்கப்பட்டனர். இது இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறைக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகும்.
மாகும்புர மல்டிமாடல் போக்குவரத்து மையத்தில் வௌ்ளிக்கிழமை (06) அன்று இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா அரியரத்ன, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமன்மாலி குணசிங்க மற்றும் இலங்கைப் போக்குவரத்துச் சபைத் தலைவர் சஜீவ கனகரட்ண ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் உரையாற்றிய பிரதி அமைச்சர் கௌசல்யா அரியரத்ன, இந்த நிகழ்வை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று விவரித்தார், நியமிக்கப்பட்டவர்கள் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் முதல் அதிகாரப்பூர்வ பெண் நடத்துனர்களாக வரலாற்றில் இணைந்துள்ளனர் என்று குறிப்பிட்டார். போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதவியேற்றதிலிருந்து போக்குவரத்துத் துறையில் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்காகப் பணியாற்றி, பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்க்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் என்றும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .