J.A. George / 2022 ஏப்ரல் 26 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘டொக்டர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன், அடுத்ததாக தமிழின் முன்னணி நடிகருடன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த நடிகை பிரியங்கா மோகன்,சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘டொக்டர்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அதன் பிறகு சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ சிவகார்த்திகேயனின் ’டான்’ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள பிரியங்கா மோகன், அடுத்ததாக ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தலைவர் 169’ திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படத்தில் பிரியங்கா மோகன் தான் நாயகி என்றும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
15 minute ago
42 minute ago
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
42 minute ago
1 hours ago
6 hours ago