Editorial / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸில் இருந்து வெளியேறிய கவின், கமல் முன்னிலையில் மீண்டும் மக்களைச் சந்தித்தார்.
பிக்பாஸில் ஆரம்பத்தில் இருந்தே கடும் விமர்சனங்களைச் சந்தித்து வந்தவர் நடிகர் கவின். காதல் மன்னன் என பெயர் வாங்கினாலும், பெண்களிடம் அவர் பழகிய விதம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
ஆனால் ஆரம்பத்தில் இருந்தே தனது நிலைப்பாட்டில் தெளிவாகத்தான் கவின் இருந்து வந்தார். தன் கடனை அடைப்பதற்காகத் தான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறேன் என்பதை அவர் அடிக்கடி நினைவுபடுத்தி வந்தார்.
திடீரென கடந்த வாரம் அதிரடியாக பிக்பாஸ் தந்த ஐந்து லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டு பிக்பாஸில் இருந்து வெளியேறினார் கவின். இதனால் அவரது ரசிகர்களும், சக போட்டியாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் கமல் முன்னிலையில் மீண்டும் மேடையில் தோன்றினார் கவின். அப்போது தன் பக்க நியாயங்களை அவர் தெளிவு படுத்தினார். மீண்டும் பிக்பாஸில் கவினை பார்த்ததால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
27 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
50 minute ago
1 hours ago