Editorial / 2019 மே 13 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், மகேஷ்பாபு, பூஜா ஹெக்டே, அல்லரி நரேஷ் மற்றும் பலர் நடித்த 'மகரிஷி' தெலுங்குத் திரைப்படம், கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியானது.
கார்ப்பரேட், விவசாயம் இரண்டையும் மையப்படுத்திய இந்தத் திரைப்படத்தின் கதை, இரசிகர்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது. தெலுங்கு பேசும் இரண்டு மாநிலங்களில் மட்டும் இந்தத் திரைப்படத்தின் வசூல், 500 மில்லியனைக் கடந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், திரைப்படத்தின் சக்சஸ் மீட், ஐதராபாத்தில் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய மகேஷ் பாபு, “மகரிஷி” திரைப்படத்தின் கதையைக் கேட்டதுமே இது நிச்சயம் வெற்றிபெறும் என நம்பியதாகக் கூறியுள்ளார்.
இந்தத் திரைப்படத்தை, தமிழில் ரீமேக் செய்ய, இப்போதே பலர் ஐதராபாத் கிளம்பிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago