2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நைட் பார்ட்டிக்கு தடை...

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


'மதராசப்பட்டினம்' திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து எமி ஜக்சனுக்கு பல்வேறு வாய்ப்புகள் கிடைத்த போதிலும் தனக்கு ஏற்றவாறு உள்ள கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தை அடுத்து, கௌதம் மேனன் இயக்கத்தில் 'விண்ணைத்தாண்டி வருவாயா?' திரைப்படத்தின் இந்தி பதிப்பில் நடித்தார்.

அடுத்து, இயக்குனர் விஜய்  - விக்ரம் இணையும் 'தாண்டவம்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். ஷங்கர் - விக்ரம் இணையும் 'ஐ' திரைப்படத்தில் நடித்துவரும் எமி ஜக்சனுக்கு கடும் கட்டுபாடுகளை விதித்து இருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

இரவானால் பார்ட்டியில் கலந்து கொண்டு, மிகவும் தாமதமாக தூங்கிவிட்டு காலையில் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம் எமி. இதனால் காட்சிகளில் எமி ஜாக்சன் முகம் பொழிவாக இல்லையாம். காட்சிகள் துல்லியமாக அமைய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தும் ஷங்கருக்கு இதனால் மனவருத்தமாம். எமி ஜாக்சனை அழைத்த ஷங்கர் 'ஐ' திரைப்படம் முடியும் வரை இரவு நேர விருந்துகளில் கலந்து கொள்ளக்கூடாது' என்று உத்தரவிட்டிருக்கிறாராம்.

பெரிய பட்ஜெட், பிரம்மாண்ட இயக்குனர், முன்னணி நாயகன் அனைத்தும் ஒரே திரைப்படத்தில் அமைந்திருப்பதால் எமியும் உத்தரவிற்கு தலையாட்டி விட்டாராம்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X