2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'கலாசார தீவிரவாதத்தை' சட்டரீதியாக எதிர்கொள்வேன்: கமல்ஹாசன்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 25 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

'என்னுடைய 'விஸ்வரூபம்' திரைப்படத்துக்கு எதிராக ஏவி விடப்பட்டிருக்கும் கலாசாரத் தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை நான் நாடவுள்ளேன்' என்று நடிகரும் - இயக்குநருமான கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

'விஸ்வரூபம்' திரைப்படத்திற்குத் தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், இத்திப்படத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் கமல்ஹாசனின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'எனக்கும், எனது திரைப்படத்திற்கும் ஆதரவாக எழுந்திருக்கும் குரல்களால் மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில், எனது திரைப்படம் எந்த வகையில், இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பது தெரியவில்லை. எனது அறிக்கைகள், பேச்சுக்கள் மூலம் அச்சமூகத்தின் அனுதாபியாக என்னை நான் நிரூபித்துள்ளேன். ஒரு நடிகனாக, எது மனிதாபிமானமோ அதற்காக நான் பல படி மேலே போய் குரல் கொடுத்துள்ளேன்.

மேலும் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக பாடுபடும் ஹார்மோனி இந்தியா அமைப்பிலும் உறுப்பினராக இருக்கிறேன். ஒரு மதத்தின் உணர்வுகளை, மதத்தை நான் புண்படுத்தி விட்டதாக என் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் என்னைக் காயப்படுத்தியுள்ளதோடு, அதை நான் ஒரு அவமரியாதையாகவும் கருதுகிறேன்.
 
சில சிறிய குழுக்கள் தங்களது அரசியல் இலாபத்திற்காக இரக்கமே இல்லாமல் என்னை ஒரு வாகனமாக பயன்படுத்திக் கொண்டுள்ளன என்பது எனது கருத்து. ஒரு பிரபலத்தை தொடர்ந்து குறி வைத்து இப்படி காயப்படுத்துவது என்பது தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது. எந்த ஒரு நடுநிலையான முஸ்லீமும், தேசபக்தி உள்ள முஸ்லீமும் இந்த திரைப்படத்தால் நிச்சயம் பெருமைப்படச் செய்வார்.

அதற்காகவே இந்த திரைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது. இப்போது நான் சட்டத்தையும், யதார்த்தத்தையும் நம்பி நிற்கப் போகிறேன். இதுபோன்ற கலாசார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் இணையதளம் மூலம் எனக்கு ஆதரவாக எழுந்தோருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.

You May Also Like

  Comments - 0

  • IBNU ABOO. Friday, 25 January 2013 12:42 PM

    சமுக, இன மத விவகாரங்களை மிக கவனமாக கையான்டு படம் தயாரிக்க வேண்டிய காலகட்டம் இது. இவ்வலவு மெத்தப்படிப்பும் மேதாவித்தனம் இருந்தும் சமூக, கால சூல்நிலை தெரியாமல் சேற்றுருக்குள் காலை விட்டு கதருகிறீர்களை கன்னா கமலா. துப்பாக்கி படத்தின் நிலை தெரியும் தானே.

    Reply : 0       0

    aj Saturday, 26 January 2013 07:27 AM

    படத்தை பார்த்தல் பலர் நன்றாக தான் பேசுகிறார்கள். எதுக்கு எடுத்தாலும் கொடி பிடிக்க ஒரு குரூப் இருக்கும். எங்கள் நாட்டிலும் இருக்கிறது. சினிமாவை சினிமாவ பாருங்க. எதுக்கு எடுத்தாலும் ... கொண்டு வந்து திணிப்பது பிறக்கு இன்னும் கடுப்பு ஆகுமே தவிர நல்ல எண்ணம் வராது. எதுக்கு எத்தாலும்..... அதை விட இந்த பயங்கரவதத்தை அழிக்கவேண்டும். திரையில் தடை செய்தால்? எதனை நாளைக்கு? ஏற்கனே இலங்கை, தமிழகம் மேலும் சில இடம் தவிர அனைத்து இடத்திலும் வெளிவந்துவிட்டது. நன்றி உங்களுடைய இலவச விளம்பரத்துக்கு :P

    Reply : 0       0

    Abdul Jabbar Saturday, 26 January 2013 09:10 AM

    அப்படியா? திரைப்பட தீவிரவாதத்தை எதிர்கொள்ள நாமும் தயார்.

    Reply : 0       0

    MMM86 Sunday, 27 January 2013 01:42 AM

    அப்படினா நக்சலட்டுகலையும் RSSகளையும் வைத்து படம் எடுக்க இருந்திச்சி தானே... இதில எங்க போயிட்டு உங்க தேசப்பற்று??????

    Reply : 0       0

    குமார் Monday, 28 January 2013 06:59 AM

    ஏற்கெனவே நக்சல்' கள் சம்பந்தமான பல திரைப்படங்கள் வந்துள்ளன . அவற்றில் கமலின் குருதிபுனலும் ஒன்றாகும்.

    Reply : 0       0

    குமார் Monday, 28 January 2013 07:02 AM

    ஆனால் எது எப்படியோ! கமல் நினைத்ததை விட அதிக வசூலைக் கொண்டுவரப்போவது உறுதி

    Reply : 0       0

    DJ Wednesday, 30 January 2013 01:06 PM

    அமெரிக்காவின் கவனத்தை ஈர்பதட்கே கமல் இப்படி படம் எடுத்து உள்ளார், ஹாலிவூட் கனவை நனவாக்க அவருக்கு கிடைத்த ஒரே ஆயுதம் இஸ்லாத்தை அமெரிக்காவை போல் விமர்சித்து படம் எடுக்கவும் அமெரிக்காவை ஆதரித்து கருத்து சொல்லவுமே... அப்படி இல்லையென்றால் அமெரிக்காவுக்கு எதிராக ஒரு கருத்தேனும் சொல்லலாமே...அமெரிக்கா ஆப்கனிஸ்தானில் செய்யாத அட்டூழியமா?

    Reply : 0       0

    MMM86 Friday, 01 February 2013 02:07 AM

    Mr.aj ஒரு விசயத்தை தெரிஞ்சிகங்க??
    ஒரு விவசாயி, தன் சொந்த நிலம், தன் சொந்த உழைப்பு என்பதற்காக கஞ்சா பயிரிட சிறப்புரிமை கோர முடியாது. கலை (சினிமா) என்பதும் ஓர் உற்பத்திப் பொருளே. அது சமூகத்துடன் வினைபுரிவதால் விளைவுகள் உண்டாகும் என்னும்போது எப்படி தணிக்கையில் இருந்து விலக்கு அளிக்க முடியும்?

    Reply : 0       0

    MMM86 Friday, 01 February 2013 02:10 AM

    1). பர்ஸானியா திரைப்படம்: இது குஜராத் கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். இது கமலின் விஸ்வரூபம் போல் இல்லாமல் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. இந்த படத்தை குஜராத்தில் வெளியிட முடியாமல் தடை செய்யப்பட்டது
    .2). DAM 999 திரைப்படம்: முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டுடன் டேம் 999 திரைப்படம் எடுக்கப்பட்டு இருப்பதாக எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக தடை செய்யப்பட்டது
    பாபா திரைப்படம்: ரஜினிகாந்த் நடித்த பாபா படத்தின் பாடல் வரிகள் எதிர்ப்பு சம்மந்தமாக மாற்றப்பட்டது. இந்த படத்துக்கு எதிராக பாமக வினர், ரஜினியின் கொடும்பாவியை எரித்தனர். தியேட்டர்களுக்கு சென்று படத்தை ஓட விடாமல் கலாட்டா செய்தனர். ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தியேட்டரைத் தாக்கி "பாபா" படப்பெட்டியை சிலர் கடத்திச் சென்றனர். விருத்தாசலத்தில் படத்தைத் திரையிட்ட உரிமையாளர் கடத்தப்பட்டாட். நீஙலும் சினிமாவை சினிமாவ பாருங்க

    Reply : 0       0

    DJ Friday, 01 February 2013 12:09 PM

    60 கோடி நஷ்டமாமே ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X