2025 செப்டெம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை

“அது இல்லாமல் உடலுறவு”

Editorial   / 2025 செப்டெம்பர் 07 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை அம்பிகா, சமூக வலைத்தளத்தில் பாலியல் குற்றங்கள் குறித்து வெளியிட்ட கருத்துக்கு சென்னை காவல் துறை நன்றி தெரிவித்துள்ளது.

புனித தோமையார் காவல் நிலையத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக சென்னை காவல் துறை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை அம்பிகா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், "அனுமதியின்றி உடலுறவு கொள்ள முயலும் பாலியல் குற்றங்கள், அது உடல் ரீதியாக இருந்தாலும் சரி, மன ரீதியாக இருந்தாலும் சரி, குற்றவாளிகள் எந்த வயசாக இருந்தாலும் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்.

சிறாராக இருந்தாலும் சரி, 100 வயது உடையவராக இருந்தாலும் சரி, குற்றம் குற்றமே," என்று கருத்து தெரிவித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, தற்போது குணசித்திர வேடங்களில் கவனம் செலுத்தி வரும் அம்பிகாவின் இந்தக் கருத்து, பாலியல் குற்றங்களுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

அவரது பதிவுக்கு பதிலளித்த சென்னை காவல் துறை, அம்பிகாவின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளது.

இந்த நிகழ்வு, சமூக வலைத்தளங்கள் மூலம் பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் பாலியல் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X