2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பிரபல தயாரிப்பாளர் மீது சிவகார்த்திகேயன் வழக்கு

Ilango Bharathy   / 2022 மார்ச் 29 , பி.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கிவுள்ள டான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது அயலான் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களின் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா மீது வழக்கு  தொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஞானவேல்ராஜாவின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து   கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘மிஸ்டர் லோக்கல்‘.

இத்திரைப் படம் கலவையான விமர்சனம் பெற்று வசூல் ரீதியாக சரிவை சந்தித்தது.

இந்நிலையில்  இப்படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயனுக்கு  15 ரூபா கோடி சம்பளம் பேசப்பட்டு, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ரூ.11 கோடியை மட்டுமே கொடுத்ததாகவும் அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்தவும் உத்தரவிடக்கோரியும் நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தனக்கு தரவேண்டிய சம்பளப் பாக்கியை செலுத்தும் வரை ஞானவேல்ராஜா தயாரிக்கும் படங்களில் அவர் முதலீடு செய்யத் தடை தேவை எனவும் ஞானவேல்ராஜாவின் படங்களுக்கானதிரையரங்கு , ஓடிடி வெளியீடு உரிமைகளை உறுதி செய்யவும் தடை தேவை எனவும் சிவகார்த்திகேயன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிவகார்த்திகேயன் தரப்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு நாளை மறுநாள் (31) விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .