2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வலிமை விமர்சனம்

J.A. George   / 2022 பெப்ரவரி 24 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னையில் மாஸ்க் அணிந்த நபர்கள் தொடர்ந்து செயின் பறிப்பு மற்றும் வழிப்பறியில் ஈடுபடுவதுடன் படத்தை ஆரம்பித்திருக்கிறார் ஹெச். வினோத். ஒரு சூப்பர் அதிகாரி வந்தால் நன்றாக இருக்கும் என்று பொலிஸ் உயர் அதிகாரி விரும்புகிறார்.

திடீர் என்று மதுரையை காட்டுகிறார்கள். அங்கு கோவில் ஊர்வலம் நடக்கிறது. மேலும் கொலைத் திட்டமும் கூட. அப்பொழுது தான் ஏ.சிபி. அர்ஜுன்(அஜித் குமார்) வருகிறர். ஒரு கடவுள் வருவது போன்று அஜித்தின் அறிமுக காட்சியை காட்டியிருக்கிறார்கள். அதை பார்த்து தியேட்டர்களில் விசில் பறக்கிறது.

அஜித்துக்கு சென்னையில் போஸ்டிங் போடுகிறார்கள். ஒரு தற்கொலை வழக்கை விசாரிக்க ஆரம்பிக்க அது பெரிய குற்றத்துடன் தொடர்புடையது தெரிய வருகிறது. அதை விசாரிக்கப் போய், முன்பு நடந்த செயின் பறிப்பு மற்றும் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்பு இருப்பதை உணர்கிறார் அர்ஜுன்.

அந்த கும்பலின் மூளையான கார்த்திகேயாவுக்கு அர்ஜுன் தன்னை தேடுவது தெரிந்ததும், விளையாட்டு வேறு விதமாக பயங்கரமாக மாறுகிறது. அதில் அர்ஜுன் குடும்பத்தார் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த குற்றவாளியிடம் இருந்து தன் குடும்பம் மற்றும் நகரத்தை காப்பாற்றுவாரா அர்ஜுன்?

சண்டையும், சென்டிமென்ட்டும் கலந்த கலவை தான் வலிமை. படத்தில் வரும் அன்பான அம்மா(சுமித்ரா), குடிகார சகோதரர் (அச்யுத் குமார்), சக ஊழியர்(ஹூமா குரேஷி) ஆகியோருக்கு தலா ஒரு சூப்பர் காட்சியை கொடுத்துவிட்டு ஓரங்கட்டிவிட்டார் வினோத்.

வழி மாறிப் போகும் சகோதரர்(ராஜ் அய்யப்பன்) கதாபாத்திரம் கூட வலுவில்லை. இதனால் தான் ஆக்ஷன் காட்சிகள் இல்லாத நேரத்தில் படம் நம்மை அவ்வளவாக கவரவில்லை.

இதை எல்லாம் சண்டையை வைத்து சரிகட்டிவிட்டார் வினோத். சண்டை காட்சிகள் அருமை. படத்தின் ஹைலைட்டே அது தான். பைக் சேஸ், பேருந்து சீக்வென்ஸ், இரண்டாம் பாதியில் வரும் பல பைக்கர்கள் எல்லாம் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு வருகிறது.

நல்லதுக்கும், கெட்டதுக்கும் இடையே நடக்கும் சண்டையே வலிமை. அஜித் தன் கதாபாத்திரத்தில் சூப்பர் ஹீரோ போன்று நடித்திருக்கிறார். அவர் வரும் ஸ்டண்ட் காட்சிகள் நம்பும்படி இருக்கிறது. படத்தை தன் தோள்களில் தாங்கியிருக்கிறார் அஜித்.

வலிமை- கொண்டாட்டம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .