2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மாவட்ட முகாமைத்துவ திறன் அபிவிருத்தி பயிற்சி நிலையம்

Kanagaraj   / 2015 ஜனவரி 23 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா


யாழ். மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மாவட்ட முகாமைத்துவ திறன் அபிவிருத்தி பயிற்சி நிலையக் கட்டடத்தை யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் வெள்ளிக்கிழமை (23) திறந்து வைத்தார்.


பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் 28 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் யாழ்.பழைய பூங்கா வீதியில்; இந்த பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.


அரச உத்தியோகஸ்தர்களுக்கான திறன் அபிவிருத்தி பயிற்சிகள் இந்த பயிற்சி நிலையத்தினூடாக நடத்தப்படவுள்ளன.


யாழ். மாவட்ட மேலதிக செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் மற்றும் அரச உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .