2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆக்கத்திறன் கண்காட்சி

Administrator   / 2015 ஜனவரி 28 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் முறைசாராக் கல்விப்பிரிவினால் நடாத்தப்பட்ட, தொழிற் பயிற்சிநெறியினைப் பூர்த்திசெய்த யுவதிகளின் ஆக்கத்திறன் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் ஏறாவூர்- மீராகேணி மாக்கான் மாக்கார் மகா வித்தியாலய மண்டபத்தில் புதன்கிழமை (28) நடைபெற்றது.


பாடசாலையிலிருந்து இடைவிலகிய மற்றும் வேலைவாய்ப்பின்றிருக்கும் முப்பது யுவதிகள், எட்டு மாதகால தொழிற்பயிற்சி நெறியினைப்பூர்த்தி செய்துள்ளனர்.


இந்நிகழ்வில், வலயக் கல்வியலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் சிதம்பரமூர்த்தி, முறைசாராக் கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். ஷரீப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .