Administrator / 2015 பெப்ரவரி 15 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று மாலை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மகத்தான வரவேற்று அளிக்கப்பட்டது.
இந்திய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா மற்றும் உயர் அதிகாரிகள் விமான நிலையத்தில் ஜனாதிபதியையும் அவரது பாரியாரையும் வரவேற்றனர்.
ஜனாதிபதியையும் பாரியாரையும் தங்கும் ஹோட்டலில் இலங்கை சிறுவர்கள்இருவர் வரவேற்றனர்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவிர, இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தர்சன் செனவிரத்ன ஆகியோரும் அங்கு பிரசன்னமாகியிருந்தார்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .