2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: பெப்ரவரி 25

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 25 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

1921: ஜோர்ஜிய குடியரசின் ரிபிலிசி நகரம் ரஷ்யாவினால் கைப்பற்றப்பட்டது.

1928: அமெரிக்க மத்திய வானொலி ஆணைக்குழுவிடமிருந்து முதலாவது தொலைக்காட்சி அனுமதிப்பத்திரத்தை வாஷிங்டன் டி.சி. நகர சார்ள்ஸ் டிக்கின்ஸ் ஆய்வுகூடம் பெற்றுக்கொண்டது.

1932: ஜேர்மன் பிரஜாவுரிமையை அடோல்வ் ஹிட்லர் பெற்றுக்கொண்டார். இதன்மூலம் 1932 ஆம் ஆண்டில் நடந்த நாட்டின் தலைவர் தேர்தல் போட்டியிட அவர் தகுதி பெற்றார்.

1933: விமானங்களை காவுவதற்காக பிரத்தியேகமாக அமெரிக்காவில் நிர்மாணிக்கப்பட்ட கப்பலான யூ.எஸ்.எஸ்.ரேஞ்சர் வெள்ளோட்டம் விடப்பட்டது.
1945: ஜேர்மனிக்கு எதிராக துருக்கி யுத்தப்பிரகடணம் செய்தது.

1948: செக்கஸ்லோவாக்கியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.

1951: முதலாவது பான் அமெரிக்க விளையாட்டுப் போட்டி ஆர்ஜென்டீனாவில் நடைபெற்றது.

1954: எகிப்தில் கமால் அப்துல் நாசர் பிரதமரானார்.

1980: பிலிப்பைன்ஸில் 20 வருடகாலமாக ஜனாதிபதியாக பதவி வகித்த பேர்டினன்ட் மார்கோஸ் நாட்டைவிட்டு தப்பிச்சென்றார். கொரஸோன் அக்குய்னோ அந்நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக தெரிவானர்.

1991: வளைகுடா யுத்தத்தின்போது, சவூதி அரோபியாவிலுள்ள அமெரிக்க படைத்தளமொன்றின்போது ஈராக்கின் ஸ்கட் ஏவுகணை தாக்கியதால் 28 அமெரிக்கப் படையினர் பலி.

1992: வார்ஸோ உடன்படிக்கை இரத்துச்செய்யப்பட்டது.

2009: பங்களாதேஷில் எல்லைக்காவல் படையினர் அவர்களின் தலைமையகத்தில் கிளர்ச்சியில் ஈடுபட்டதால்  50 இராணுவ அதிகாரிகள் உட்பட 74 பேர் பலி.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .