2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தேர்தலுக்கு முன் தேர்தல் முறைமையில் மாற்றம்: ஜனாதிபதி

Kanagaraj   / 2015 மார்ச் 05 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த தேர்தலுக்கு முன்னர் தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக்கட்சியும் இணங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலேயே  ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் அமைப்பின் ஊடாக, நிறைவேற்று அதிகாரகொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை,; கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பிலான தனது உடன்பாட்டை வெளியிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .