2026 பெப்ரவரி 12, வியாழக்கிழமை

ரவி வெத்தசிங்ஹவுக்கு எதிராக ஆறு வழக்குகள் தாக்கல்

Kanagaraj   / 2015 மார்ச் 17 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல கோடீஸ்வர வர்த்தகரான ரவி வெத்தசிங்ஹவுக்கு எதிராக ஆறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

7.5 கோடி ரூபாய் பெறுமதியான இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 143 பஸ்கள் தொடர்பில் நம்பிக்கை மீறினார் என்ற குற்றச்சாட்டின் கீழே அவருக்கு எதிராக இந்த ஆறு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

இவருக்கு பிணை வழங்குமாறு கோரப்பட்டபோதே, சிரேஷ்ட அரச சட்டத்தரணி நியோமி விக்கிரசேகர, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா டி சில்வா தென்னக்கோனின் கவனத்துக்கு கொண்டுவந்தார். 

கோடீஸ்வர வர்த்தகர் சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி ஆரியகுலரத்ன, கடந்த ஆட்சியின் போது வெளிநாட்டில் தலைமறைவாக வாழ்ந்த தனது தரப்பைச்சேர்ந்தவர், புதிய அரசாங்கம் ஆட்சியமைத்ததன் பின்னர் இலங்கைக்கு திரும்பி சிறைவாசம் அனுபவிக்கின்றார் என்பதனால் அவருக்கு பிணைவழங்குவதில் பிரச்சினை இல்லை என்று நீதவானின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X