Princiya Dixci / 2016 ஜூன் 28 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தபால், உப-தபால், முகவர், கிராமிய முகவர் மற்றும் தோட்டப்புற தபால் அலுவலகங்கள் என நாட்டில் மொத்தமாக 4,692 தபால் அலுவலகங்கள் இருப்பதாகவும் அதில், 1,887 உப தபால் அலுவலகங்கள், 2015ஆம் ஆண்டு ஒரு கடிதத்தையேனும் விநியோகிக்கவில்லை என்றும் இலங்கை தபால் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் மொத்தமாக 3,410 உப-தபால் அலுவலகங்கள் இருக்கின்றன. அதில், 41 உப-தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. 3,369 உப- தபால் அலுவலகங்கள் மாத்திரமே கடமைகளை மேற்கொள்கின்றன.
இதேவேளை, வருடாந்தம் நபரொருவருக்கு 16 கடிதங்கள் கிடைப்பதாகவும் ஒரு தபால் அலுவலகம் 4,332 மக்களுக்கு சேவையாற்றுகின்றது என்றும் ஒவ்வொரு தபால் அலுவலகத்தின் மூலமும் சேவையாற்றப்படுகின்ற நிலப்பகுதி 13 சதுர கிலோமீற்றர் என்றும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026