Freelancer / 2024 டிசெம்பர் 27 , பி.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாசாவினால் அனுப்பப்பட்ட விண்கலம் ஒன்று சூரியனுக்கு மிக அருகாமையில் சென்றுள்ளது.
இது பாதிப்பு ஏதுவும் அற்ற நிலையில் சாதனை படைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விண்கலத்திலிருந்து சமிக்ஞைகள் வழமைபோல பெறப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
'பாக்கர் சோலர்' என பெயரிடப்பட்ட இந்த விண்கலத்தின் பயணத்தின் மூலம் எதிர்காலத்தில், சூரியனின் மேற்பரப்பிலிருந்து 38 லட்சம் மைல்களுக்கு அப்பால் இருந்து பாதுகாப்பாக பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.
தற்போது விண்கலம் பூமியிலிருந்து 9 கோடியே 30 இலட்சம் மைல்களுக்கு அப்பால் உள்ளமை குறிப்பிடத்தக்கது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .