2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

4,000 ஆண்டுகளில் பின் அதிக வெப்பம்

Menaka Mookandi   / 2013 மார்ச் 09 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் வெப்பநிலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வடைந்துள்ளது. குறைந்த பட்சம் 4000 வருடங்களில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை உயர்வடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மனித இனத்தின் தவறான செயல்பாடுகளால் வெப்பநிலையில் இந்த மற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லும். இதுவரை நவீன புவியியல் யுகத்தில் நாம் கண்டிராத அளவு அதிக வெப்பத்தை நாம் உணர்வோம்.

நவீன புவியியல் யுகத்தின் ஒரு பகுதி 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இந்த காலத்தில் தான் அதிக வெப்பத்தை உமிழ்ந்து கொண்டிருந்த சூரிய ஒளியின் அளவில் மாற்றம் ஏற்பட்டது.

வட துருவங்களில் பனிக்கட்டிகளின் உருகும் அளவு அதிகரித்துள்ளது. 8000 ஆண்டுகளுக்கு முன்னர் தான் மனித நாகரிகம் உருவானது. அதன் பின்னர் தொடர்ந்து வளர்ச்சி அடைந்த மனித நாகரிகம் இந்த வெப்பநிலை மாற்றத்துக்கு காரணமாக இருக்கிறது என்று ஒரேகான் மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X