Editorial / 2022 மார்ச் 16 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, புதுச்செட்டித் தெரு ஸ்ரீராதா கிருஷ்ண ஆலயத்தில் நாளை 17ஆம் திகதி வியாழக்கிழமையும், நாளை மறுதினம் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் ஸ்ரீசைதன்ய மகாப்பிரபுவின் அவதாரத்தையொட்டி கௌர பூர்ணிமா விழா கொண்டாடப்படும்.
வியாழன் காலை 10.00 மணிமுதல் ஹரிநாம சங்கீர்த்தனம், ஸ்ரீசைதன்ய மகாப்பிரபுவின் வாழ்க்கை நிகழ்வுககள் பற்றிய விளக்கம், ராஜபோக ஆராத்தி, பிரசாதம் வழங்கல், கௌர ஆராத்தி என்பன இடம்பெற்று நிச்சயிக்கப்பட்ட தினத்தில் ஆலய கும்பாபிஷேகம் இனிதே நடைபெறவேண்டி சிறப்பு வழிபாடு என்பன நடத்தப்படும்.
வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீசைதன்ய மகாப்பிரபுவிற்கு விஷேட அபிஷேகம், தவத்திரு ஜெயபதாக சுவாமி அவர்கள் பற்றிய காணொளி ஒளிபரப்பல் என்பன இடம்பெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். இந்த கௌரபூர்ணிமா விழாவில் இரண்டு நாட்களும் கலந்துகொண்டு பகவான் அருளைப் பெற்றுக்கொள்ளுமாறு பக்தர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
3 hours ago
6 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
02 May 2026