2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தாந்தாமலை முருகன் ஆலய 17ஆம் நாள் திருவிழா

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 07 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் 17ஆம் நாள் திருவிழா செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்றது.

மூல மூர்த்தியாகிய முருகப் பெருமானுக்கு முலஸ்தான பூஜை மற்றும் வசந்த மண்டப பூஜை என்பன இடம்பெற்று மூஷிக வாகனத்தில் பிள்ளையார், எருது வாகனத்தில் சிவன் பார்வதி மற்றும் மயில் வாகனத்தில் தாந்தாமலைக் கந்தனின் திருவுருவங்கள் வீதி  வலம் எடுத்து வரப்பட்டன.

உற்சவக் கிரியைகளை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு.கு. சச்சிதானந்தக் குருக்கள் நிறைவேற்றினார்.

கடந்த 20ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இவ்விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (10) தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .