2025 மே 19, திங்கட்கிழமை

திருமலை ஸ்ரீபத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்

Kogilavani   / 2013 மார்ச் 17 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


- சி.குருநாதன்


திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நேற்று சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

சித்திரத்தேர் திருவிழா எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமையும் சமுத்திரத் தீர்த்தத் திருவழா மறுநாள் செவ்வாய்க்கிழமை காலையும் நடைபெறவுள்ளது.

கொடியேற்றத்திலிருந்து தினமும் 24 ஆம் திகதி வரை காலை அபிஷேகம் பின்னர் மூலஸ்தான பூஜை பின்னர் வசந்த மண்டப பூஜை நடைபெற்று காலை திருவிழா நிறைவுபெறும்.

மாலையில் அபிஷேகம், மூலஸ்தான பூஜை பின்னர் தம்பபூஜை, வசந்த மண்ட பூஜை ஆகியவற்றின் பின்னர் அம்பாள் வெளிவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இதன்படி முதல் திருவிழாவான நேற்று சனிக்கிழமை மாலை அம்பாள் விநாயகப்பெருமான் மற்றும் முருகப்பெருமான் சகிதம் காராம்பசு வாகனத்தில் வெளிவீதி உலா வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X