2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆன்மீக நூல் வெளியீட்டு விழா

Editorial   / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஜெயரட்ணம்

இங்கிரிய, றைகம் மேற்பிரிவு ஸ்ரீ குறிஞ்சி மகாமாரி அம்மன் ஆலயத்தின் கொடிதம்ப பிரதிஷ்டை மற்றும் ஆன்மீக நூல் வெளியீட்டு விழா அண்மையில் றைகம், மேற்பிரிவு ஸ்ரீ குறிஞ்சி மகாமாரி அம்மன் ஆலயத்தில், தேசமான்ய சிவஸ்ரீ  குமார விக்னேஷ்வர சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது ஆலயத்தின் கொடிதம்ப பிரதிஷ்டை நிகழ்வின் இறுதியில், அதிதிகளால் ஆலய சிறப்பு நூல் வெளியீடு வைபவம்  இடம்பெற்றது. இதுவரையில் இலங்கையில் வெளியான ஆன்மீக சிறப்பு  நூல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில், முழு வண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட பல்சுவை அம்சங்கள் அடங்கிய, ஆன்மீக சஞ்சிகை நூலாக இது வெளிவந்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .