2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சங்கீர்த்தனமும் பாற்குடப்பவனியும்

Niroshini   / 2016 மார்ச் 07 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

ஸ்ரீ கல்கி பகவானின் 68ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு நகரில் இன்று நகர சங்கீர்த்தனமும் பாற்குடப்பவனியும் நடைபெற்றது.

மட்டக்களப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமான ஊர்வலம், ஆஸ்பத்திரி வீதி, கோவிந்தன் வீதி, முனை வீதி, திருமலை வீதி மற்றும் பார் வீதி வழியாக அரசடி தேவநாயகம் மண்டபத்தை சென்றடைந்தது.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட ஏகதத்துவ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், மட்டக்களப்பு, சித்தாண்டி, செங்கலடி, வாழைச்சேனை, பாண்டிருப்பு மற்றும் களுவாஞ்சிக்குடி சத்சங்கத்தினர் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .