Editorial / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்
வரலாற்றுச் சிறப்புமிக்க அக்கரைப்பற்று ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் கோவில் வருடாந்த அலங்காரத் திருச்சடங்குப் பெருவிழாவின் பாற்குடபவனி, ஆலய தலைவர் சா.கருணாகரன் தலைமையில், இன்று (03) நடைபெற்றது.
அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் கோவிலிலிருந்து ஆரம்பமான பாற்குடபவனி, நகரின் பிரதான வீதிகளினூடாகச் சென்று கோவிலை அடைந்தது.
பிரதான கிரியைகள் யாவற்றையும் வம்மியடிப்பிள்ளையார் கோவில் பிரதமகுரு சிவஸ்ரீ ப.கு.கேதீஸ்வரக்குருக்கள் ஆரம்பித்து வைத்ததுடன், பிரதமகுரு க.சிவராசா, உற்சவகால குரு சிவத்திரு இ.யோகானந்தம் உள்ளிட்ட குருமார்களால் நடத்திவைக்கப்பட்டன.



4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago