2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொங்கல் உற்சவ ஆரம்பம்

Princiya Dixci   / 2022 மார்ச் 13 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.தில்லைநாதன்

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக காணப்படுகின்ற கரைச்சி, புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோவில் வருடாந்த பங்குனி  உத்தரப் பொங்கல் உற்சவம், கடந்த   வெள்ளிக்கிழமை (11) ஆரம்பமாகியது.

இந்த உற்சவம் விளக்கு வைத்தல் பூசையுடன் ஆரம்பமாகி, பாரம்பரிய முறைப்படி பண்டமெடுத்து வருவதற்காக மாட்டு வண்டிகளில்  பக்தர்கள், யாழ். புத்தூர், பண்டமரவடிக்கு  சென்றனர்.

புளியம்பொக்கனை நாகதம்பிரான் கோவிலின் வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் விழா, எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .