Editorial / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கியமான நபர்கள் இருவர், சர்வதேச ஊடகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்களை அழைத்து நாட்டின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளிக்கத் தீர்மானித்தார்களாம்.
அதற்காக நாளொன்றும் தீர்மானிக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டதாம். எனினும் இறுதி நேரத்தில் அந்தச் சந்திப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
இதற்கான காரணத்தைத் தேடியபோது இவ்வாறானதொரு தகவல் கசிந்தது.
இப்போது ஒவ்வொரு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கதையைக் கூறி வருகிறார்கள். அவை அத்தனை விடயங்கள் பற்றியும் பதிலளிக்க வேண்டிவரும். அத்தோடு முன்னாள் இராணுவத் தளபதி குறித்து கட்டாயம் கேள்வி எழுப்புவார்கள். அதில் ஒரு வார்த்தை மாற்றிக் கதைத்துவிட்டாலும் பிரச்சினை பெரிதாகிவிடும் என்பதால் இந்த சந்திப்பு தவிர்க்கப்பட்டதாம்.
ஒரு வகையான பயமும் உள்ளதுதான் போல!
51 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
01 May 2026