Menaka Mookandi / 2018 மே 16 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்காலக் கணிப்புகளைக் கூறி, நாட்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றுக்கொண்ட பெண்ணொருவரின் சாஸ்திரம் கூறும் நிலையம், சிலரால் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தைப் போன்று, எதிரணியைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் அடிக்கடி சென்றுவரும் இந்த நிலையத்தின் ஊடாக, காலை முதல் மாலை வரை, நாள்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு சாஸ்திரம் கூறப்பட்டு வந்தது. இங்கு கூறப்படும் அரசியல் எதிர்காலக் கணிப்புகள், மிகவும் பிரசித்தமானவை.
இந்நிலையில், எதிர்காலத்தில் அரசியல் நிலைப்பாடு தொடர்பிலும், அந்தப் பெண் அண்மையில் சில விடயங்களைக் கூறியிருந்தாராம். எதிர்கால அரசாங்கத் தலைவர் தொடர்பிலும் அவர் கூறியிருந்ததாகக் கூறப்பட்டது.
அப்பெண்ணின் இவ்வாறான எதிர்காலக் கணிப்புகள் காரணமாக, பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வந்தனவாம். இந்நிலையில் தான், அப்பெண்ணின் நிலையம், தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
15 Mar 2026
15 Mar 2026
15 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Mar 2026
15 Mar 2026
15 Mar 2026