Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2023 ஓகஸ்ட் 07 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கி.மு 322: மகா அலெக்சாண்டர் இறந்ததைத் தொடர்ந்து ஏதென்சுக்கும் மக்கெடோனியர்களுக்கும் இடையில் "கிரான்னன்" என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
1461: மிங் வம்ச சீன தளபதி காவோ சின் செங்டொங் பேரரசருக்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டான்.
1819: கொலம்பியாவின் "பொயாக்கா" என்ற இடத்தில் ஸ்பானியர்களுக்கு எதிரான போரில் சிமோன் பொலிவார் பெரு வெற்றி பெற்றான்.
1832: இலங்கையில் சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
1898: யாழ்ப்பாணம் மானிப்பாயில் டாக்டர் ஸ்கொட் தலைமையில் மானிப்பாய் மருத்துவமனை புதிய கட்டடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
1906: கல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.
1927: ஒன்டாரியோவுக்கும் நியூயோர்க்கிற்கும் இடையில் அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது.
1933: ஈராக்கில் சுமைல் கிராமத்தில் 3,000 ஆசிரியர்கள் ஈராக்கிய அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.
1942: இரண்டாம் உலகப் போர் - குவாடல்கனால் போர் ஆரம்பம். அமெரிக்க கடற்படையினர் சொலமன் தீவுகளின் குவாடல்கனால் தீவில் தரையிறங்கினர்.
1944: திட்டப்படுத்தப்பட்ட முதலாவது கணிப்பானை (ஹார்வார்ட் மார்க் ஈ) ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது.
1945: இரண்டாம் உலகப் போர் - ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் அறிவித்தார்.
1955 - சொனி நிறுவனம் தனது முதலாவது திரிதடைய வானொலியை ஜப்பானில் விற்க ஆரம்பித்தது.
1960: ஐவரி கோஸ்ட் சுதந்திரம் பெற்றது.
1972: ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் 90 நாட்களுக்குள் உகண்டாவிலிருந்து வெளியேற வேண்டுமென அந்நாட்டு அதிபர் இடி அமீன் உத்தரவிட்டார்.
1998: கென்யாவிலும் தான்ஸானியாவிலும் அமெரிக்கத் தூதரகங்கள் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் 212 பேர் பலியாகினர்.
1999: இரண்டாவது செச்னிய யுத்தம் ஆரம்பமாகியது.
2006: இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் சிவப்பிரகாசம் மரியதாஸ் என்பவர் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்டார்.
2008: தெற்கு ஒசெஷியாவுக்கு எதிராக ஜோர்ஜியா இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது
6 minute ago
17 minute ago
40 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
40 minute ago
47 minute ago