Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 22 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1910 : ஜப்பான் -கொரியா இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடியும் வரையில், கொரியா ஜப்பானின் ஆட்சியின் கீழ் இருந்தது.
1911 : பாரிசில் களவெடுக்கப்பட்ட மோனா லிசா ஓவியம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.
1932 : தொலைக்காட்சி சேவையை முதன் முதலாக பிபிசி சோதித்தது.
1941 : இரண்டாம் உலகப் போர் - நாட்சி ஜேர்மனி படைகள் ரஷ்யாவில் லெனின்கிராட் முற்றுகையை ஆரம்பித்தன.
1942 : இரண்டாம் உலகப் போர் - ஜேர்ருமனி, ஜப்பான், இத்தாலி மீது பிரேஸில் போர் தொடுத்தது.
1944 : இரண்டாம் உலகப் போர் - கிரீட்டில் ஜேர்மானியப் படைகள் யூதர்களுக்கு எதிரான இனவழிப்பை ஆரம்பித்தன.
1949 : கனடாவில் 8.1 அளவு நிலநடுக்கம் பதிவாகியது.
1953 : பிரெஞ்சு கயானாவில் அமைக்கப்பட்டிருந்த டெவில்சு தீவு என்ற குற்றவாளிகளின் குடியேற்றத் தீவு நிரந்தரமாக மூடப்பட்டது.
1962 : பிரெஞ்சு அரசுத்தலைவர் சார்லஸ் டி கோல் மீதான கொலை முயற்சி தோல்வியடைந்தது.
1968 : திருத்தந்தை ஆறாம் பவுல் கொலம்பியா, பொகோட்டா நகரை வந்தடைந்தார். இலத்தீன் அமெரிக்காவுக்கு திருத்தந்தை ஒருவர் பயணம் செய்தமை இதுவே முடல் தடவையாகும்.
1972 : ரொடீசியா அதன் இனெவெறிக் கொள்கை காரணமாக ஒலிம்பிக் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டது.
1978 : சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி போராளிகள் நிக்கராகுவாவின் தேசிய அரண்மனையைக் கைப்பற்றினர்.
1985 : பிரித்தானியாவின் ஏர்டூர்சு விமானம் மான்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது, அதன் இயந்திரம் தீப்பிடித்ததில், 55 பேர் உயிரிழந்தனர்.
1989 : நெப்டியூனின் முதலாவது கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்ட்டது.
1991 : சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பிராவ்தா பத்திரிகை மூடப்பட்டது.
2004 : நோர்வே, ஒசுலோவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து எட்வர்ட் மண்ச்சின் அலறல், மடோன்னா ஆகிய ஓவியங்கள் துப்பாக்கி முனையில் திருடப்பட்டன.
2006 : கிழக்கு உக்ரைனில் ரஷ்ய எல்லையில் புல்கோவோ விமானம் வீழ்ந்து நொருங்கியதில், அதில் பயணம் செய்த அனைத்து 170 பேரும் உயிரிழந்தனர்.
2006 : கிரிகோரி பெரல்மான் புவங்காரே அனுமானத்திற்கான நிறுவல்களைக் கண்டுபிடித்தமைக்காக, அவருக்கு ஃபீல்ட்ஸ் பதக்கம் அறிவிக்கப்பட்டது. எனினும், அவர் அப்பதக்கத்தைப் பெற மறுத்து விட்டார்.
2012 : கென்யாவில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் உரிமைகள் தொடர்பாக இனக்கலவரங்கள் இடம்பெற்றதில் 52 பேர் உயிரிழந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
43 minute ago
1 hours ago
1 hours ago