Ilango Bharathy / 2022 செப்டெம்பர் 27 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1290: சீனாவில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுமார் ஒரு லட்சம் பேர் பலி.
1590: பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டு 13 நாட்களில் 7ஆம் ஆர்பன் மரணம்.
1821: ஸ்பெய்னிடமிருந்து மெக்ஸிகோ சுதந்திரம் பெற்றது.
1928: சீனக் குடியரசு அமெரிக்காவினால் அங்கீகரிக்கப்பட்டது.
1940: இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜேர்மனி, ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளுக்கிடையில் 'முச்சக்தி ஒப்பந்தம்' பேர்லின் நகரில் கையெழுத்திடப்பட்டது.
1943: ஜேர்மனியில் அமெரிக்காவின் முதலாவது விமான தாக்குதல் இடம்பெற்றது.
1959: ஜப்பானின் ஹொன்ஸு தீவில் வீசிய சூறாவளியினால் சுமார் 5இ000 பேர் மரணம்.
1970: ஜோர்டானில் அந்நாட்டுப் படைகளுக்கும் பலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஜோர்தான் மன்னர் ஹுஸைனும் பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யஸீர் அரபாத்தும் சமாதான உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட்டனர்.
1988: சியோல் ஒலிம்பிக் 100 மீற்றர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற பென் ஜோன்ஸன், ஊக்கமருந்து சோதனையில் வெற்றி பெறத் தவறியதால் அவரின் பதக்கம் பறிக்கப்பட்டது.
1996 : 3 பல நாட்கள் நடந்த கடும் சண்டையின் பின் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் கைபற்றினர்.
1998: உலகின் மிகப்பெரிய இணைய தேடல் தளமான கூகுள் ஆரம்பிக்கப்பட்டது.

2002: கிழக்கு திமோர் ஐ.நா.வில் இணைந்தது.
2 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
05 Nov 2025
05 Nov 2025