Ilango Bharathy / 2021 டிசெம்பர் 12 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
1862: அமெரிக்க சிவில் யுத்தத்தின்போது யாஸு நதியில் யூ.எஸ்.எஸ். கெய்ரோ எனும் கப்பல் பொறிவெடியில் சிக்கி மூழ்கியது. இலத்திரனியல் பொறிவெடி மூலம் மூழ்கடிக்கப்பட்ட முதலாவது ஆயுதக் கப்பல் இது.
1901: அத்திலாந்திக் சமுத்திரத்திற்கூடாக முதலாவது வானொலி சமிக்ஞையை மார்கோணி பெற்றார்.
1911: இந்தியத் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.
1911: பிரிட்டனின் 5 ஆம் ஜோர்ஜ் மன்னர், இந்தியாவின் மன்னராகவும் பதவியேற்றார்.
1940: பிரிட்டனின் ஷீபில்ட் நகரில் ஜேர்மனிய விமானங்களின் குண்டுவீச்சினால் பிரிட்டனில் 70 பேர் பலி.
1942: கனடாவின் நியூபவுண்லாந்தில் ஹோட்டலொன்றில் ஏற்பட்ட தீயினால் சுமார் 100 பேர் பலி.
1963: பிரிட்டனிடமிருந்து கென்யா சுதந்திரம் பெற்றது.
1979: கொலம்பியாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 259 பேர் பலி.
1985: கனடாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 256 பேர் பலி.
2000: ஜோர்ஜ் புஷ், அல் கோர் ஆகியோருக்கிடையிலான அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் சர்ச்சை தொடர்பாக அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
6 minute ago
9 minute ago
30 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
30 minute ago
55 minute ago