R.Tharaniya / 2025 மே 04 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
1519: இத்தாலிய ஓவியர் லியனார்டோ டா வின்சி உயிரிழந்தார்.(பிறப்பு - 1452)
1536: இங்கிலாந்தின் 8 ஆம் ஹென்றி மன்னனின் இரண்டாவது மனைவியும் அவருக்குப்பின் 3 வருடகாலம் ராணியாக ஆட்சி புரிந்தவருமான ஆன் போலெய்ன் தகாத உறவு, மற்றும் ராஜதுரோக குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் சிரச்சேதம் செய்யப்பட்டார்.
1933: ஜேர்மனியில் தொழிற்சங்கங்களை அடோல்வ் ஹிட்லர் தடைசெய்தார்.
1945: ஜேர்மன் தலைநகர் பேர்லின் கைப்பற்றப்பட்டாக சோவியத் யூனியன் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
1969: குயின் எலிஸபெத்2 கப்பல் தனது கன்னிப் பயணத்தை ஆரம்பித்தது.
1997: பிரிட்டனில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் டொனி பிளேயர் தலைமையிலான தொழிற்கட்சி பெரு வெற்றி பெற்றது.
1998: ஐரோப்பிய மத்திய வங்கி உருவாக்கப்பட்டது.
2002: கேரளாவில் பாலக்காடு நகரில் இடம்பெற்ற கலவரங்களில் 8 இந்துக்கள் கொல்லப்பட்டனர்.
2004: நைஜீரியாவில் யேல்வா நகரில் நடந்த கலவரத்தில் 630 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
2006: குஜராத் மாவட்டத்தில் மசூதி ஒன்று இடிக்கப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலகத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
2008: மியன்மாரில் வீசிய சூறாவளியினால் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகினர்.
2011: அல் கயீடா இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் அமெரிக்கப்படையினரின் தாக்குதலில் பலி.
8 hours ago
02 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 Jan 2026